Sunday, May 26, 2013

மப்புடன் எழுதியது - 6

பனியன், ஜட்டில ஓட்டை இருந்த வெளிய தெரியமா இருக்க நாம பான்ட் சட்டை போட்டுகுறோம்.

அது மாதிரி தான் அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். அடுத்தவனுக்கு தெரியாது.

இது தான் வாழ்கை

# நேத்து சரக்கு அடிக்கும் போது, உதிர்ந்த தத்துவம் :)))

Friday, May 24, 2013

மப்புடன் எழுதியது - 5

பாசம் ....
வெக்கும் போது இருக்கும் சுகத்தை விட 
இழக்கும் போது ஏற்படும் வலி கொடுமையானது.

# விட்டுட்டு போய்டா :(((

Friday, May 17, 2013

நானும் எழுத போறேன் கவித ...



நானும் கவித எழுத போறேன் .....

தக்காளி ...... வெறும்பய எழுதுன எழுத்துக்கு ஏகப்பட்ட தோழிகள் கிடைச்சுட்டாங்க, அதுவும் சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காங், தைவான் இப்படி ஏகப்பட்டது. 

இதுனால, நான் தண்ணியடுசுட்டு உளறுறது, டெரர் கும்மி நாதாரிகளுக்கு போன் பண்ணி வாந்தி எடுக்கறது எல்லாம் நின்னு போச்சு.

அதுனால, தமிழ்நாடு அரசுக்கு எந்தவித நஷ்டம் வந்திடக்கூடாதுனு ஒரு நல்லென்னதுக்காகவும், நான் போன் பன்னி பேசலனு மனசு பொக்குனு போன டெரர் கும்மி நாதரிகளுக்காகவும், என்னைய போல குடி மக்களுக்காகவும்  மற்றும் பதிவுலகம் நண்பர்களுக்காகவும் நான் இன்று முதல் சரக்கு அடித்துவிட்டு கவிதா ......... மனிக்கவும் கவித, தத்துவம் (டெரர் மக்களே, நம்ம தத்துவம் இல்ல), பொன்மொழிகள் போன்றவை இங்கே பகிரப்படும். அதை பார்த்து, படித்து பயன்பெறுங்கள். 

இதோ உங்களுக்கு ஒரு கவித ....


நன்றி 

இப்படிக்கு,

டாஸ்மாக் கவி மாலுமி.






நெற்றிப் புருவம் 
என் மூச்சை 
நிறுத்தும்..

ரத்த கீறல் 
என் இதயத்தில்..

சிரிக்கும் போது 
கன்னத்தில் 
விழவேண்டிய குழி..
என் இதயத்தில்..

மரணத்தை 
முழு மனதுடன் 
ஏற்றுக்கொண்டு 
கண்ணை மூடுகிறேன்...

யாரும் பார்க்காத 
ஒரு வெண்ணிலவைப் 
பார்த்து விட்டேனென்று........

Thursday, May 16, 2013

மப்புடன் எழுதியது - 4


நாம ராத்திரி பகல்னு பாக்காம, 
டெய்லி சோறு போடுற கம்பனிக்காக 
நன்றியுள்ள நாய் விட பத்து படிக்கு மேல உழச்சு, 
உயிர் நண்பன் கூட திட்டாத வார்த்தைய, 
கஸ்டமர் கிட்ட கை கட்டி நின்னு வாங்கி, 
அத வெக்கம், மானம், சூடு, சொரண இல்லாம 
மூஞ்சில எந்த வித ரியாக்சன் இல்லாம காமிச்சு, 
அன்னைக்கு நைட் தண்ணியடுச்சு உள்ளே இருக்குற 
பீலிங்க்ஸ் எல்லாம் தனியா கொட்டி, 

அடுத்த நாள் புது பிரச்சனைய மதம் கொண்ட 
யானை போல எதிர் கொள்ள ரெடி ஆகி, 
கம்பெனிய டவலப் பண்ணிட்டு இருக்கோம்.

ஆனா ..... 
நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு கொடுக்குற காசுல, 
external ஆடிட்னு  சொல்லி, 
போன வருஷம் MBA முடிச்சுட்டு வந்த கொளந்தைகள வெச்சு, 
அதுக்கு ABCD ஒரு வாரம் சொல்லிக்கொடுத்து, 
அதுக management கிட்ட இவனுக ABCD use பண்ணுறது தப்புன்னு சொல்லி, எங்களை ரெண்டு மாசம் சந்தேக கண்களோட வறுத்து எடுக்கறது எந்த விதத்துல நியாயம் ....... CMD அவர்களே.....


# External ஆடிட், அதோட ரிப்போர்ட் கொடுமைகள் ..... :(((
மொதல பழைய செருப்பு எடுத்து ...... என்னைய அடிக்கணும் ...... 
எதுக்கு அந்த கொழந்தைகளுக்கு ABCD சொல்லிக்கொடுத்த ????

Wednesday, May 15, 2013

பட்டா ...... ஐ லவ் யூ ......

முடிந்தது எல்லாம் முடிந்தது 
பட்டாப்பட்டியின் நக்கல், நையாண்டி 
ஆடு அறுப்பு எல்லாம் முடிந்தது 

காரமடை ஜோசியன் எங்கையோ 
ஓடிவிட்டான் போல நீண்ட நாட்களாக 
அவர் கடை பக்கம் காணோம் 

ஒரு வேளை இருந்திருந்தால் பதிவுலகம் 
இவ்வளவு கண்ணீரை சிந்திருக்காது 

இன்று காலை அங்கே பார்த்த பல 
பெரிய முகங்களை பார்த்தவுடன்
தான் தெரிந்தது 

நீ எனக்கு சொந்தம் என ...

இதுவரை இருவருக்கும் 
முகம் தெரியாது, உண்மையான பெயர் தெரியாது 
தெரிந்தது நட்பு, எழுத்து, பேச்சு 

நீ பதிவுலகை விட்டு சென்றதுக்கு அப்புறம் 
தெரிகிறது உன் வரலாறு எனக்கு 

என்ன கொடுமை இது .... :(((
இந்த வலி சாகும் வரை நிலைக்குமே :(((

பட்டா ...... ஐ லவ் யூ ...... 
இதுக்கு மேல் என்ன சொல்லுவதென தெரியவில்லை .........


Sunday, May 12, 2013

மப்புடன் எழுதியது - 3

எல்லோருக்கும் வணக்கம் .... :)

கடைசியா பதிவு எழுதி ஒரு வருஷம் ஆகிபோச்சு, அதுனால தான் துருபுடிச்சு கிடக்குற பூட்டை கஷ்டப்பட்டு (ப்ளாக் அட்ரஸ் மறந்து போச்சு ... ஹி ஹி ஹி ...) உடைச்சு, கடைய திறந்து, சுத்தமா கூட்டி பெருக்கி, ஒரு பூஜை போட்டு வெச்சுருக்கேன்.

நான் ஒரு வருசமா பதிவு எழுதாதனால, அந்த பசுமை டாக்ட்டறு கட்சில போய் சேந்துட்டு ரோடு ஓரத்துல இருக்குற மரத்தை வெட்டுற மாதிரி, என்னைய கண்டந்துண்டமா வெட்ட ரெடியா இருக்கறவங்களும், சாமிக்கு நெய், பால் அபிசேகம் பண்ணுற மாதிரி எனக்கு கண்டபடி காறி காறி துப்பி அபிசேகம் செய்ய ஆவலுடன் இருக்கும் டெரர் கும்மி நாதரிகளுக்கும், அம்மாவ பாத்த MLA மாதிரி கூனி குறுகி மன்னிப்பு கேட்டுக்குறேன்.

சரக்கு அடிக்கும் போது தான் நமக்கு சிந்தனைகள் புல்லா அடிச்சுட்டு வாந்தி எடுக்குற மாதிரி அருவியா கொட்டும். அப்படி ஒரு சிந்தனை, அதுதான் மப்பு சிந்தனை....

கொடுமைகள்
என்றும் இளமையாகவே 
இருக்கின்றன ...
எப்போது முதுமை 
அடையும் ???

அவ்வளவு தான்....இனி வாழ்த்து சொல்லுறவங்க, காறி துப்பறவங்க எல்லோரும் வந்து உங்க கடமைய செஞ்சுட்டு போங்க ...... :)
(அப்பாடி ..... இந்த வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .....)