Tuesday, July 16, 2013

படித்ததில்... பிடித்தது... - 4

தான் மாற வேண்டும் என்று எவர் ஒருவராலும் அடுத்தவரை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. மாற்றம் என்னும் ஒரு கதவை நாம் ஒவ்வொருவரும் காவல் காத்து வருகிறோம். உள்ளிருந்து மட்டுமே அக்கதவை திறக்க முடியும். விவாதத்தின் மூலமாகவோ அல்லது உணர்ச்சிமயமான கோரிக்கையின் மூலமாகவோ இன்னொருவரின் கதவை நம்மால் திறக்க முடியாது.

- மர்லின் ஃபெர்கூசன்


Monday, July 15, 2013

படித்ததில்... பிடித்தது... - 3

நாம் சுலபமாக கைவசப்படுதுகின்ற விஷயங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். 
ஒரு பொருள் எவ்வளவு அரிதாக இருக்கிறதோ அதைப் பொறுத்தே அதன் மதிப்பு அதிகரிக்கிறது.

- தாமஸ் பெயின்.


Monday, June 17, 2013

எடுத்ததில்... பிடித்தது... - 1

சாடிவயல் செக் போஸ்ட், சிறுவாணி.






Saturday, June 8, 2013

படித்ததில்... பிடித்தது... - 2

நாம் வாழும் இப்பிரபஞ்சத்தில் புவிஈர்ப்பு விசை விதி போல பல விதிகள் இருக்கின்றன. நீங்கள் ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்தால், நீங்கள் நல்லவராக இருந்தாலும் சரி, தீயவராக இருந்தாலும் சரி, நிலத்தில் வந்து விழப் போவது நிச்சயம்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்


Tuesday, June 4, 2013

படித்ததில்... பிடித்தது... - 1

பெரும்பாலான மக்கள் தங்களுக்கு என்ன வேண்டாம் என்பதைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். பின்னர் மீண்டும் மீண்டும் அந்த வேண்டாத விசயங்களே ஏன் வருகின்றன என்று வியந்து கொண்டிருக்கின்றனர்.
தாங்கள் விரும்பியவற்றை மக்கள் பெறாதிருப்பதக்கு ஒரே காரணம் அவர்கள் தங்களுக்கு எது வேண்டும் என்பதைவிட, தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டிருப்பதுதான். நீங்கள் சிந்திக்கும் எண்ணங்களை உற்று கவனியுங்கள். நீங்கள் சிந்தும் வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இந்த விதி முழுமையானது.எவ்வித தவறுகளுக்கும் இங்கு இடமில்லை.

மனிதகுலம் இதுவரையில் சந்தித்த எந்தவொரு கொள்ளை நோயைக் காட்டிலும் படுமோசமான தொற்றுநோய் ஒன்று பல நூற்றாண்டுகளாக நம்மிடையே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. அதுதான் "எனக்கு வேண்டாம்" என்னும் தொற்றுநோய். தங்களுக்கு எது வேண்டாம் என்பதை குறித்து சிந்தித்துக் கொண்டு, பேசிக் கொண்டு, செயல்பட்டுக் கொண்டு தங்களது கவனம் முழுவதும் அதில் குவித்துக் கொண்டு இருப்பதன் மூலம் மக்கள் இந்த தொற்றுநோயை பேணி வளர்கின்றனர்.

- இரகசியம், ரோன்டா பைர்ன்.


Monday, June 3, 2013

மப்புடன் எழுதியது - 7

ரொம்ப தூரம் டூ வீலர்ல போகணும்னு ரொம்ப நாளாக நினச்சுட்டு இருந்தேன். நேத்து மதியத்துக்கு சாப்பிட்டதுக்கு அப்புறம், என் சிங்கம் (தண்டர் பறவை) எடுத்துட்டு எங்கே போறதுன்னு தெரியல, ஒரே குழப்பமா இருந்தது .... 

கிழக்கு பக்கம் போக முடியாது, போன ஈரோடு தான் போகணும். தெக்க பக்கம் போன பொள்ளாச்சி தான் போகணும். வடக்க பக்கம் மேட்டுபாளையம் இல்ல மேக்க பாலக்காடு இப்படி எதாவது ஒரு இடத்துக்கு  போகணும்னு முடிவு பண்ணினேன். சரி சாப்பிட எதாவது வாங்கிட்டு போகலாம்னு வண்டிய நேரா மெக்டொனால்க்கு விட்டேன். அங்கே ஒரு மீடியம் சைஸ் கோக் (ஐஸ் நிறைய போட்டு) & வெஜ் பர்கர், ரெண்டு ஸ்மால் பிரெஞ்சு குச்சிய வாங்கிட்டு வெளியே வந்தேன். 

அப்போ தான் எனக்கு உள்ளே இருக்குற நல்லவன் வெளியே எட்டிப்பாதான்.  வண்டி நேர டாஸ்மாக் போச்சு, ஒரு கோட்டர் RC வாங்கிட்டு எல்லாத்தையும் நல்லா சைடு பைல போட்டு முதுகுல மாட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, நல்லவன் கூட சிறுவாணி போனேன்.

பேரூர் தாண்டியவுடன், லேசா தூறல் மழை, சில்லுனு காத்து, ரோட்டுல அதிகம் ஆள், வண்டி நடமாற்றம் இல்லை, 40 டு 50 KM ஸ்பீட்ல, என்ஜாய் பண்ணிட்டு போனேன். கூட ஒரு பிகர் இருந்தா இன்னும் என்ஜாய் தான்.

ஒரு மணி நேரம் டிரைவ் பண்ணி, சாடிவயல் செக் போஸ்ட்க்கு போனேன். அங்கே பெரிய அறிவிப்பு தொங்கிட்டு இருந்தது " இன்று விடுமுறை". சரி அப்படியே திருப்பிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடினேன். அதுதான் இது.




கண்ணுக்கு முன்னாடி, பெருசா மழை பெய்யுது ஆனா நான் நின்னுட்டு இருக்குற இடத்துல லேசா தூறல் மட்டும், அமைதியான இடம், மழை பெய்யும் சத்தம் மட்டும் கேக்குது.

சிங்கம் மேல ஏறி உக்காந்து, தங்க ராஜாவா இந்த ஒரு கிளு கிளுப்பான நேரத்துல மெதுவா, சில நேரத்துல அழுத்தமா, பிரெஞ்சு கிஸ் கொடுத்துட்டு என்ஜாய் பண்ணினேன். அதுக்குள்ள நல்லவன் என் முதுக சொரிய ஆரம்பிச்சான். சில்லுனு இருந்த கோக் கொஞ்சம் பூமிக்கு தானம் பண்ணிட்டு அதுல கோட்டர் RCய அப்படியே கலந்தேன். பிரெஞ்சு குச்சிய எடுத்து வெச்சு, ஒரு வாய் குடிச்சேன். 





என்ன ஒரு சுகம் ....... 
என் வாழ்க்கைல இப்படி ஒரு சூழ்நிலைல சரக்கு அடிச்சது இல்லை :)

அப்படியே, மழை பெய்யறது, நிக்கறது, காத்து வீசறது, இந்த ஆட்டத்தை ஒரு மணி நேரம் பாத்துட்டு, வாங்கிட்டு வந்தது எல்லாம் தின்னு புட்டு கிளம்பினேன்.

கொடுமை ஏன் இன்னும் இளமையா இருக்குதுன்னு இப்போ தான் தெரியுது :)))


Sunday, May 26, 2013

மப்புடன் எழுதியது - 6

பனியன், ஜட்டில ஓட்டை இருந்த வெளிய தெரியமா இருக்க நாம பான்ட் சட்டை போட்டுகுறோம்.

அது மாதிரி தான் அவனவன் கஷ்டம் அவனுக்கு தான் தெரியும். அடுத்தவனுக்கு தெரியாது.

இது தான் வாழ்கை

# நேத்து சரக்கு அடிக்கும் போது, உதிர்ந்த தத்துவம் :)))

Friday, May 24, 2013

மப்புடன் எழுதியது - 5

பாசம் ....
வெக்கும் போது இருக்கும் சுகத்தை விட 
இழக்கும் போது ஏற்படும் வலி கொடுமையானது.

# விட்டுட்டு போய்டா :(((

Friday, May 17, 2013

நானும் எழுத போறேன் கவித ...



நானும் கவித எழுத போறேன் .....

தக்காளி ...... வெறும்பய எழுதுன எழுத்துக்கு ஏகப்பட்ட தோழிகள் கிடைச்சுட்டாங்க, அதுவும் சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காங், தைவான் இப்படி ஏகப்பட்டது. 

இதுனால, நான் தண்ணியடுசுட்டு உளறுறது, டெரர் கும்மி நாதாரிகளுக்கு போன் பண்ணி வாந்தி எடுக்கறது எல்லாம் நின்னு போச்சு.

அதுனால, தமிழ்நாடு அரசுக்கு எந்தவித நஷ்டம் வந்திடக்கூடாதுனு ஒரு நல்லென்னதுக்காகவும், நான் போன் பன்னி பேசலனு மனசு பொக்குனு போன டெரர் கும்மி நாதரிகளுக்காகவும், என்னைய போல குடி மக்களுக்காகவும்  மற்றும் பதிவுலகம் நண்பர்களுக்காகவும் நான் இன்று முதல் சரக்கு அடித்துவிட்டு கவிதா ......... மனிக்கவும் கவித, தத்துவம் (டெரர் மக்களே, நம்ம தத்துவம் இல்ல), பொன்மொழிகள் போன்றவை இங்கே பகிரப்படும். அதை பார்த்து, படித்து பயன்பெறுங்கள். 

இதோ உங்களுக்கு ஒரு கவித ....


நன்றி 

இப்படிக்கு,

டாஸ்மாக் கவி மாலுமி.






நெற்றிப் புருவம் 
என் மூச்சை 
நிறுத்தும்..

ரத்த கீறல் 
என் இதயத்தில்..

சிரிக்கும் போது 
கன்னத்தில் 
விழவேண்டிய குழி..
என் இதயத்தில்..

மரணத்தை 
முழு மனதுடன் 
ஏற்றுக்கொண்டு 
கண்ணை மூடுகிறேன்...

யாரும் பார்க்காத 
ஒரு வெண்ணிலவைப் 
பார்த்து விட்டேனென்று........

Thursday, May 16, 2013

மப்புடன் எழுதியது - 4


நாம ராத்திரி பகல்னு பாக்காம, 
டெய்லி சோறு போடுற கம்பனிக்காக 
நன்றியுள்ள நாய் விட பத்து படிக்கு மேல உழச்சு, 
உயிர் நண்பன் கூட திட்டாத வார்த்தைய, 
கஸ்டமர் கிட்ட கை கட்டி நின்னு வாங்கி, 
அத வெக்கம், மானம், சூடு, சொரண இல்லாம 
மூஞ்சில எந்த வித ரியாக்சன் இல்லாம காமிச்சு, 
அன்னைக்கு நைட் தண்ணியடுச்சு உள்ளே இருக்குற 
பீலிங்க்ஸ் எல்லாம் தனியா கொட்டி, 

அடுத்த நாள் புது பிரச்சனைய மதம் கொண்ட 
யானை போல எதிர் கொள்ள ரெடி ஆகி, 
கம்பெனிய டவலப் பண்ணிட்டு இருக்கோம்.

ஆனா ..... 
நாங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு கொடுக்குற காசுல, 
external ஆடிட்னு  சொல்லி, 
போன வருஷம் MBA முடிச்சுட்டு வந்த கொளந்தைகள வெச்சு, 
அதுக்கு ABCD ஒரு வாரம் சொல்லிக்கொடுத்து, 
அதுக management கிட்ட இவனுக ABCD use பண்ணுறது தப்புன்னு சொல்லி, எங்களை ரெண்டு மாசம் சந்தேக கண்களோட வறுத்து எடுக்கறது எந்த விதத்துல நியாயம் ....... CMD அவர்களே.....


# External ஆடிட், அதோட ரிப்போர்ட் கொடுமைகள் ..... :(((
மொதல பழைய செருப்பு எடுத்து ...... என்னைய அடிக்கணும் ...... 
எதுக்கு அந்த கொழந்தைகளுக்கு ABCD சொல்லிக்கொடுத்த ????

Wednesday, May 15, 2013

பட்டா ...... ஐ லவ் யூ ......

முடிந்தது எல்லாம் முடிந்தது 
பட்டாப்பட்டியின் நக்கல், நையாண்டி 
ஆடு அறுப்பு எல்லாம் முடிந்தது 

காரமடை ஜோசியன் எங்கையோ 
ஓடிவிட்டான் போல நீண்ட நாட்களாக 
அவர் கடை பக்கம் காணோம் 

ஒரு வேளை இருந்திருந்தால் பதிவுலகம் 
இவ்வளவு கண்ணீரை சிந்திருக்காது 

இன்று காலை அங்கே பார்த்த பல 
பெரிய முகங்களை பார்த்தவுடன்
தான் தெரிந்தது 

நீ எனக்கு சொந்தம் என ...

இதுவரை இருவருக்கும் 
முகம் தெரியாது, உண்மையான பெயர் தெரியாது 
தெரிந்தது நட்பு, எழுத்து, பேச்சு 

நீ பதிவுலகை விட்டு சென்றதுக்கு அப்புறம் 
தெரிகிறது உன் வரலாறு எனக்கு 

என்ன கொடுமை இது .... :(((
இந்த வலி சாகும் வரை நிலைக்குமே :(((

பட்டா ...... ஐ லவ் யூ ...... 
இதுக்கு மேல் என்ன சொல்லுவதென தெரியவில்லை .........


Sunday, May 12, 2013

மப்புடன் எழுதியது - 3

எல்லோருக்கும் வணக்கம் .... :)

கடைசியா பதிவு எழுதி ஒரு வருஷம் ஆகிபோச்சு, அதுனால தான் துருபுடிச்சு கிடக்குற பூட்டை கஷ்டப்பட்டு (ப்ளாக் அட்ரஸ் மறந்து போச்சு ... ஹி ஹி ஹி ...) உடைச்சு, கடைய திறந்து, சுத்தமா கூட்டி பெருக்கி, ஒரு பூஜை போட்டு வெச்சுருக்கேன்.

நான் ஒரு வருசமா பதிவு எழுதாதனால, அந்த பசுமை டாக்ட்டறு கட்சில போய் சேந்துட்டு ரோடு ஓரத்துல இருக்குற மரத்தை வெட்டுற மாதிரி, என்னைய கண்டந்துண்டமா வெட்ட ரெடியா இருக்கறவங்களும், சாமிக்கு நெய், பால் அபிசேகம் பண்ணுற மாதிரி எனக்கு கண்டபடி காறி காறி துப்பி அபிசேகம் செய்ய ஆவலுடன் இருக்கும் டெரர் கும்மி நாதரிகளுக்கும், அம்மாவ பாத்த MLA மாதிரி கூனி குறுகி மன்னிப்பு கேட்டுக்குறேன்.

சரக்கு அடிக்கும் போது தான் நமக்கு சிந்தனைகள் புல்லா அடிச்சுட்டு வாந்தி எடுக்குற மாதிரி அருவியா கொட்டும். அப்படி ஒரு சிந்தனை, அதுதான் மப்பு சிந்தனை....

கொடுமைகள்
என்றும் இளமையாகவே 
இருக்கின்றன ...
எப்போது முதுமை 
அடையும் ???

அவ்வளவு தான்....இனி வாழ்த்து சொல்லுறவங்க, காறி துப்பறவங்க எல்லோரும் வந்து உங்க கடமைய செஞ்சுட்டு போங்க ...... :)
(அப்பாடி ..... இந்த வருசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சு .....)